கோதபாயவிற்கு ஞாபக மறதி நோய் ஏற்பட்டுள்ளது – ராஜித சேனாரட்ன !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிற்கு ஞாபக மறதி நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரை விடுதலை செய்துள்ளார் எனவும் அவற்றை மறந்து விட்டு தற்போது இந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களான நகுலேஸ்வரன், தமிழினி மற்றும் குமரன் பத்மநாதன் போன்றவர்களை கோதபாய ராஜபக்ஸவே விடுதலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தை மறந்துவிட்டு கோதபாய ராஜபக்ஸ கருத்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வசீம் தாஜூடீன் கொலை குறித்த சீ.சீ.டி.வி கமரா காட்சிகளை அழித்து விட்டதாக சந்தேக நபர்கள் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும், தற்போது அந்த தகவல்கள் மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.