சீபா ஒப்பந்தத்தில் அரசு கையொப்பமிடாது – பிரதமர்

 

சீபா எனப்படும் இந்தியாவுடனான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையொப்பமிடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Ranil-18

பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, சீபா ஒப்பந்தம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலேயே தாம் இந்த உடன்படிக்கைக்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான ஒப்பந்தமொன்றை இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலேயே தற்போது ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.