பிரதமர் மோடி பாகிஸ்தான் பயணம்: சுஷ்மா அறிவிப்பு!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் குறித்த ‘ஆசியாவின் இதயம்’ என்ற பல்நோக்கு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு வருவார் என தெரிவித்துள்ளார்.

sushma1--621x414

பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்தித்ததையடுத்து, பாங்காக் நகரில் இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இதைதொடர்ந்து, ஆசியாவின் இதயம் மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ள சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரி சர்தாஜ் அஜிஸ் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை இன்று சந்தித்து பேசுகிறார். இந்நிலையில், பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு வருவார். அவருடன் நானும் வருவேன் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.