முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல்: ரஷ்யா தகவல்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

a2a2ce44-286f-4c37-8940-d4aa4df3c0b3_S_secvpf

சிரியா மீதான தாக்குதல் தொடர்பாக விளாடிமிர் புதின் தலைமையில் மாஸ்கோவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட தகவலை தெரிவித்தார்.  சிரியாவின் ரக்கா பகுதி மீது மத்திய தரைக்கடலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தப்போவது பற்றி 3 நாட்களுக்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் தெரிவித்துவிட்டதாக பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். திவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் முதல் முறையாக ரஷ்யா நீர்முழ்கி கப்பல்களை பயன்படுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.