2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தேதி அறிவிப்பு!

images

2016-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் குறித்து முடிவு எடுக்கவும், சென்னை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக புதிய இரு அணிகளை தேர்வு செய்வதற்குமான ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதில் புனே, ராஜ்கோட் ஆகிய அணிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளும் 2016 மற்றும் 2017-ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். சீசனில் கலந்து கொள்ளும்.

மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியின் தேதியும் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 51 நாட்கள் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் ஏலம் பிப்ரவரி 6-ந்தேதி பெங்களூரில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை மற்றும் போட்டி நடத்தப்படும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.