பாகிஸ்தான் சென்றடைந்தார் சுஷ்மா: பிரதமர்-வெளியுறவு மந்திரியை சந்திக்கிறார்!

 

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் குறித்த ‘ஆசியாவின் இதயம்’ என்ற பல்நோக்கு மாநாடு 9–ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். 

sushma1--621x414
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி சர்தாஜ் அஜிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்திக்கிறார். 

இஸ்லாமாபாத் சென்றடைந்ததும் தனது பயணம் குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ், இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படவேண்டும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் தலைவர்களுடன் எந்த விஷயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்து கருத்து கூற மறுத்த அவர், பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதனை விவரிப்பதாக கூறினார்.