அம்பாறை சம்மாந்துறை பிரதான விதியில் விபத்து ஒருவர் பலி!

 

பி.எம்.எம்.ஏ.காதர்

ஆம்பாறை சம்மாந்தறை பிரதான வீதியில் இன்று (08-12-2018)காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிர் இழந்தார்.உயிர் இழந்தவர் சமாந்துறையைச் சேர்ந்த 62 வயதுடைய மூன்று பிள்ளளைகளின் தந்தையான ஆதம்பாவா தங்கராசா என்பவராவார்.

2-PMMA CADER-08-12-2015_Fotor

 

இன்று காலை சம்மாந்துறையில் இருந்து மாட்டு வண்டியில் உரமூடைகளை ஏற்றிக் கொண்டு வங்களாவடிச் சந்திவழியாக பயனித்துக்கொண்டிருந்த வேளை அம்பாறை நோக்கி வந்த கனரக வாகனம் ஒன்றில் மோதுண்டு இவர் ஸ்தலத்திலேயே மரணமானார்.மாட்டுவண்டியும் மாடுகளும் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

3-PMMA CADER-08-12-2015_Fotor 1-PMMA CADER-08-12-2015_Fotor