அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் பலி !

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

French Rafale (R and C) jets and a Mirag
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அல்-ஹோல் என்ற இடத்தில் அமெரிக்கக் கூட்டுப்படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தகவலை சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்தவர்களில் 7 சிறுவர்கள் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்டோரும் உள்ளதாகவும் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. இடிபாடுகளில் இருந்து சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்க்கை அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க கூட்டுப் படையினரின் ஆதரவுடன் குர்தீஷ், அரபு கிளர்ச்சி குழுக்கள் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது கடந்த ஒரு மாத காலமாக தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.