பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவுக்கு பிணை !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அவரது இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 
கஹவத்தைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி 9ம் திகதி இரவு அளுத்கம பகுதியில் வைத்து பிரேமலால் ஜெயசேகர கைதுசெய்யப்பட்டார். 

அதன் பின்னர் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் பல முறை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட இவரை இன்று பிணையில் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.