( வீடியோ ) லண்டனில் சுரங்க ரெயில் நிலையத்தில் கத்திகுத்து தாக்குதல் : 3 பேர் காயம் !

லண்டனில் லேட்ன்ஸ் டோனில் சுரங்க ரெயில் நிலையம் உள்ளது அங்கு ரெயிலுக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம மனிதர்கள் நீளமான கத்தியால் அங்கு இருந்த பயணிகளை தாக்கினர்.

103219572-GettyImages-500125632.530x298

இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த பயணிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே அங்கு வந்த போலீசார் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

_87059729_87059728

இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது தீவிரவாதிகளின் தாக்குதல் என லண்டன் மெட்ரோ பாலிடன் போலீசார் தெரிவித்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது இங்கிலாந்து போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

https://www.youtube.com/watch?v=UIGLlAwyYv8