சென்னையில் சாலையோரங்களில் தூங்கிய மக்கள் !

சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வீடுகளில் புகுந்தது. பல வீடுகள் இடிந்தன. இதனால் அங்கிருந்த மக்களில் பெரும் பாலானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

சிலர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் சாலையோரங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இரவில் சாலையோரங்களில் கடும் குளிரிலும் குழந்தைகளுடன் படுத்து தூங்கினர். பலர் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த சாலைகளிலும் உறங்கினர்.

151204095019-india-chennai-flood-6-super-169

ஓரளவு வெள்ளம் வடிந்த நிலையில் மீண்டும் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்தனர். ஆனால் மீண்டும் மழை பெய்து வருவதால் வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் தொடர்ந்து சாலை யோரங்களில் தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.