வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருடர்கள் பிடிபட்டனர்!

 

அசாஹீம் 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்செனை பொலிஸார் தெரிவித்தனர்.

01_Fotor

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, தியாவட்டுவான், மீறாவோடை போன்ற பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்று வந்த வேலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திபபுட்டுமுனயின் வழிகாட்டலில் நியமிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எம்.அருனக்காந் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இச் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் இவர்கலாள் திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

03_Fotor

கைது செய்யப்பட்டுள்ள திருடர்கள் 36, 22 மற்றும் 18 வயதுடையவர்கள் என்றும் இவர்களில் இருவர் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றயவர் மாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் ஐந்து சார்ஜர் டோச் லைட் 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் இன்னும் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.