பாராளுமன்றக் குழு முறையை ஜனவரி மாதம் முதல் செயற்படுத்த திட்டம் – பிரதமர்

பாராளுமன்றக் குழு முறையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் செயற்படுத்த இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். 

Ranil-18

ஒவ்வொரு விடயங்கள் மற்றும் அமைச்சுக்கள் சம்பந்தமாகவும் பரிசோதனை செய்வதற்காகவே இந்த குழு அமைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 

மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத்தின் கன்னிஅமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தபோதே இதனைத் தெரிவித்தார். 

அத்துடன், பாராளுமன்றம், அமைச்சுக்கள் மற்றும் மாகாண முதலமைச்சர்களுக்கிடையில் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்.