நாவிதன் வெளிப் பிரதேசத்தின் அழுகுரலுக்கு கிடைத்த பரிசு!

FB_IMG_1448856398807

எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றாக இருந்து வந்த பாதைகளின் பிரச்சினையை நிபர்த்தி செய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லும் வகையில் தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் சார்பில் கல்முனை தொகுதி இணைப்பாளராகிய நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு சென்றிருந்தேன் . .

அந்த மகஜரை சம்பந்தப்படுத்திய ஊடக அறிக்கை ஒன்றையும் கடந்த நவம்பர் 18,19,20ம் திகதி ஊடகங்களில் வெளியிட்டிருந்தோம் .என்பது சகலரும் அறிந்ததே. சமுகம் கேட்பார் பார்ப்பார் இன்றி அனாதையாக எடுப்பார் கைபொம்மையாக இருந்த போது எங்களுடை கட்சி இந்த பிரச்சினையை மக்கள் மயப்படுத்தி சம்பந்த பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக எங்கள் கட்சி சார்பில் நாம் எடுத்த முதலாவது முயற்சி வெற்றியடைந்துள்ளது. எமது பாதைகளின் நிலையை அறிந்து நாவிதன்வெளி பிரதேச சபையினால் வீதிகளை சரிசெய்வதற்கான கேள்வி மனுவை கோரியுள்ளார்கள் .(கடந்த நவம்பர் 30 ம் திகதிய தினகரன் 06ம் பக்கம்)

இதன் மூலம் சமூகம் விழித்தால் எமது மக்கள் பிரதிநிதிகளால் உறங்க முடியாது என்பது எம்மால் உணர கூடியதாக உள்ளதையும் இங்கு சுற்றிகாட்ட விரும்புகிறேன். எமது மனுவை ஏற்று உடனடியாக அமுல்படுத்த முன்வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்.இதனை மக்கள் கவனத்திற்க்கு கொண்டுசேர்த்த 40க்கும் அதிகமான ஊடக நிறுவனங்களுக்கும் இவ்வேளையில் தனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் இன்சா அல்லாஹ் தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் முழு முயற்சியால் மிக விரைவில் எமது 06ம் கொலனி பிரதேசத்தில் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை அமைக்க முழு முயற்சியுடன் இறங்கியுள்ளதையும் இவ்வேளையில் தெரிவித்துவைக்க விரும்புகிறேன்.என இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் கல்முனை தொகுதி இணைப்பாளரும், அல்-மீசான் பௌண்டேசனின் கல்வித்துறைக்கான பிரதிப்பணிப்பாளருமான தாஹிர் முஹம்மது சபீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 20151202_140027