பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் !

ஹாசிப் யாஸீன்

harees

கல்முனை தொகுதிக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) காலை 9.00 மணிக்கு கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டம் சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம், கல்முனை தமிழ் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு சாய்ந்தமருது, கல்முனை பிரதேச அரசியல் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்முனை தொகுதியில் சகல துறைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் இனங் காணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.