அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சியை 6.5 வீதமாக அதிகரிக்க வேண்டும் : பிரதமர் !

Ranil
பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாக ஆக்குவது கடினமான பணி எனினும் சாத்தியமற்றது அல்ல என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் அதனை செய்ய வேண்டும் எனவும் காரணம் 2030ம் ஆண்டளவில் இலங்கை அதிக வருமானம் பெரும் நாடாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பு பங்குச் சந்தையின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெரும் நிகழ்வில் கருத்து வௌியிட்ட போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதேவேளை, அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சியை 6.5 வீதமாக அதிகரிக்க நாம் எமது வேகத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

எனவே, எமது உழைப்பு இந்த இலக்கை அடைய திரட்டப்பட வேண்டும், எனவும் பிரதமர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.