இலங்கையை வந்தடைந்தார்….

01-SecKerry

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார்.

 புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்று  இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.

 அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரியுடன் வந்த 35 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வரவேற்றார். –