அவன்ற் கார்ட் – கோத்தபாய ராஜபக்ஸவின் வர்த்தக நடவடிக்கை : ராஜித்த !

அவன்ற் கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்து குறித்து விசாரணைகளை நடத்துமாறு அண்மையில் மூன்று அமைச்சர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

rajitha-senarathna

அம்மூவரில் ஒருவரான அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் மிலாகிரிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதன்போது, இது கோத்தபாய ராஜபக்ஸவின் வர்த்தக நடவடிக்கை எனவும் இதன் பின்னணியில் ராஜபக்ஸக்களே இருக்கின்றார்கள் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.