தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை : மங்கள

 

mangala-samaraweera_650x400_41435145071

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று மோல்ட்டாவில் நடைபெற்றிருந்தது.

இதன்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகளை, தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை.

மாறாக அவர்கள் வன்முறைகளிலேயே ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை பொதுநலவாய நாடுகள் மத்தியில் காணப்படுகின்ற இனவாதம், வன்முறையுடன் கூடிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் என்பவற்றை தடுப்பதற்கு, பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.