மாணவன் தற்கொலை : வடக்கில் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு !

 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோண்டாவில் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது   .

தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும் என குறித்த மாணவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 வியாழன் காலை 7.45 அளவில் காங்கேசன்துறையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தின் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் யாழ்ப்பாணம் – கொக்குவில் பாடசாலையொன்றில் கல்வி பயில்பவர் என ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாண பாடசாலைகள் நாளை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் வருமாறு: