சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி ஊடகவியலாளர்களுக்கு விஷேட செயலமர்வு!

 

 

பி.எம்.எம்.ஏ.காதர்

 

சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி எயிட்ஸ் நோய் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு சனிக்கிழமை (28-11-2015)காலை 9.30மணி தொடக்கம் பகல் 12.30 மணிவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் அறிவித்துள்ளார்.
இந்த செயலமர்வில் அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.