காஷ்மீர் எல்லையில் ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 4 வீரர்கள் காயம் !

b24185b1-0d80-4b71-975b-435333a69b51_S_secvpf

 காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

வடக்கு காஷ்மீரில் தங்தார் பகுதியில் 31 கூர்க்கா ரைபிள் படை பிரிவின் ராணுவ முகாம்கள் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். உடனே ராணுவத்தினரும் திருப்பித் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இரு பக்கம் இருந்தும் துப்பாக்கிகள் சுடும் சத்தம் கேட்பதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ முகாம்கள் தீப்பிடித்து எரிவதாகவும், தீயணைப்பு படை மற்றும் அவசர கால படையினர் விரைந்து இருப்பதாகவும் நேரில் பார்த்த எல்லைப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ராணுவம், தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் ராணுவம் தரப்பில் 4 வீரர்கள் காயம் அடைந்தனர்.

பலியான 3 தீவிரவாதிகளின் இறுதி ஊர்வலம் ஸ்ரீநகரில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அப்போது முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் முதல்–மந்திரி முப்தி முகமது சயீத் வீட்டின் அருகில் சென்று திடீர் என்று பாகிஸ்தான் கொடியேற்றினர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் இதை முறியடித்தனர்.