எம். வை பாவா கொழும்பு மேற்கு காதி நீதிபதியாக இன்று நியமனம்!

அஸ்ரப் ஏ சமத்

கல்வியலாளா்  தேசமான்ய எம். வை.ஏ. பாவா (ஜே.பி)  கொழும்பு மேற்கு நீதி நிர்வாக பிரிவுக்கு புதிய காதி நீதவனாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால்  நியமிக்கப்பட்டுள்ளாா். 

11029
நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் இவா் தெரிபுசெய்யப்பட்டிருந்தாா். 

கொழும்பு மேற்கு நீதி நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, நுகேகொடை, பெப்லியான, மஹரகம, ஹோமாகம, பண்னிப்பிட்டிய, பொல்கஸ்விட்ட, இங்கிரிய, ராஜகிரிய, பத்தரமுல்ல, அத்துருகிரிய, போன்ற பிரதேசங்களுக்குப் பொறுப்பாக இருப்பாா்.

தெடாபுகளுக்கு இல 10 பீச் றோட், கல்கிசை