அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு !

நாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 

ravi karunanayake

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார். 

இறக்குமதி வரிகள் இன்றி தங்கம் இறக்குமதி செய்வதற்கான விஷேட அனுமதிப்பத்திரங்கள் 50 வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்த இரத்தினக் கல் ஏல விற்பனை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.