கப்று வணக்கம் !

unnamed

 யாமறிந்த பித் அத்திலே 

இந்த பித் அத் போல்

இழிதாக எங்கும் காணோம்

பாமரத் தனமாக

பலரையும் கூட்டி வைத்து

சாமியைப் போன்று

சாய்ந்து கிடக்கும் கபுறுடைய

பூமியில் விழுகிறார்

புலம்பிப் பாடுகிறார்.

உள்ளே உள்ளவரு

உண்மையில் நல்லவரா

உள்ளத்தை அறிந்தவன்

ஓரிறைவன் மட்டுமே

இல்லாத வழியொன்றை

இஸ்லாத்தில் புகுத்தி

அல்லாஹ்வின் மார்கத்தை

அவமானப் படுத்துகிறார்

எல்லா மொழிகளிலும்

இறைஞ்சுகிறார் கபுறடியில்

உள்ளே உள்ளவர்

உயிரோடு இருக்கையிலே

ஒரு மொழிதான் அறிந்திருந்தார்

உசிரு போனபின்னால்

டியூசன் போனாரா

டிக்‌ஷனறி பார்த்தாரா

எல்லோரும் பேசுவதை

எப்படி அறிகின்றார்.

குறுக்கால சிந்திப்போர்

கூட்டம் சேர்ப்பதற்கும்

சுறுக்காக உழைப்பதற்கும்

சோடித்த வழி இதுவாம்.

சிர்க்கை உண்டாக்கும்

இறையருளை துண்டாக்கும்

இருக்கும் ஈமானை

இல்லாமல் அழித்து விடும்.

காத்தான்குடி நிஷவ்ஸ் -20/11/2015