அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கையைப் பலப் படுத்துவதுதான் காலத்தின் தேவை !

Minister_Rishad_3_0

தற்போது அதிகாரப் பதவிகளில் உள்ள அமைச்சர்களில் ஒப்பிட்டு நோக்கும் போது துடி துடிப்பானவராகவும், தன்னால் முடிந்த  அளவு சமூகத்துக்கு சேவை செய்வதை நாடி நிற்பவராகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன்  உள்ளார் என தேசிய ஜனநாயாக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா  குறிப்பிட்டார் .

 

தற்கால அரசியல் சூழ் நிலையில் மாற்றம் ஒன்றை நாடாமல் சகல சமூகமும் கட்சி பேதம் ,போட்டி ,பொறாமை, பிரதேசவாதம் என்பவற்றை  மறந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கையைப் பலப் படுத்துவதுதான் காலத்தின் தேவை எனவும் குறிப்பிட்டார் .