இலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலர் நியமனம்!

sri lanka

இலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி பிரியாணி விஜயசேகர அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சீனாவுக்கான தூதுவராக கருணாசேன கொடிதுவக்கு மற்றும் இத்தாலிக்கான தூதுவராக டீ.எஸ்.எல்.பெல்பொல ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் இந்தோனேஷியாவுக்கான உயர்ஸ்தானிகராக தர்ஷன பெரேராவும் ஜோர்தான் தூதுவராக ஏ.எல்.எம்.லபீரும், மியன்மார் தூதுவராக கே.டப்ளியூ.எம்.டீ.கருணாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை சவுதி அரேபியத் தூதுவராக ஏ.எம்.தஷீமும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராக சுனில் டீ சில்வாவும் சிங்கப்பூர் உயர்ஸ்தானிகராக நிமல் வீரரத்னவும், துருக்கிக்கான தூதுவராக சீ.எம்.அன்சாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான தூதுவராக எஸ்.ஜே.மொஹைடீன் தேர்தவு செய்யப்பட்டுள்ளதோடு பலஸ்தீன் தூதுவராக எம்.எஸ்.அன்வர் தெரிவாகியுள்ளார்.