பாரிஸ் தாக்குதல்: பெல்ஜியம் நாட்டில் 5 பேர் கைது!

 

பாரிஸ் நகரில் நூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் 5 பேர் புருசெல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

bcb31759-7a99-4e89-9f69-a8b669465862_S_secvpf

முன்னதாக, பாரிசில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் நின்ற சாம்பல் நிற மர்மக்கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தக் கார் பெல்ஜியம் நாட்டு பதிவு எண்ணை கொண்டிருந்தது. இதுதொடர்பான விசாரணையில் அந்தக் காருடன் தொடர்புடைய சிலரை பெல்ஜியம் அரசு கைது செய்துள்ளது.

பாரிஸ் தாக்குதல் தொடர்பாக சனிக்கிழமை பெல்ஜியத்தின் பல பகுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை.