தபால் திணைக்களத்தின் வியாபார மேம்பாட்டுத்திட்ட நிகழ்வு கல்முனையில்…!

பி.எம்.எம்.ஏ.காதர்

 

கல்முனை தபால் நிலையத்தின் ஏற்பாட்டில்; தபால் திணைக்களத்தின் வியாபார மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு சனிக்கிழமை(14-11-2015)கல்முனை இடம் பெற்றது.கல்முனை தபால் அதிபர் ஈ.குருரநாதனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு தபால்மா அதிபர் வி.வி.விவேகானந்த லிங்கம்,பிரதேச தபால் அத்தியட்சகர் ரி.அருட் செல்வம் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

1-PMMA CADER-14-11-2015_Fotor

 

கல்முனை மாநகரில் ஊர்வலமாகச் சென்று தபால் திணைக்களத்தின் வியாபார மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.இதன் தொடராக தபால் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மின்சாரப்பட்டியல்,தொலைபேசிப்பட்டியல் மற்றும் ஏனைய விடையங்கள் பற்றியும் அறிமுகப்படுத்தினார்கள்.

5-PMMA CADER-14-11-2015_Fotor