ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்ள துருக்கி சென்றடைந்தார் மோடி !

NarendraModi3_Fotor

 மூன்று நாள் இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரதமர் மோடி துருக்கி சென்றடைந்தார் .

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டர் பக்கத்தில் “குட் பாய் லண்டன். பிரதமர் மோடியின் 3 நாள் இங்கிலாந்து பயணம் ஒரு வெற்றிகரமான பயணமாக அமைந்தது. ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்ள மோடி துருக்கி புறப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

10425843_10156340056245165_4819468611164123998_n
துருக்கியில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு நவ. 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின்போது, கடந்த முறை பிரிஸ்பேன் நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.