மன்னார் அமுதனின் கவிதை நூல் வெளியீடு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்
 மன்னார் அமுதனின் அன்ன யாவினும் எனும் மூன்றாவது கவிதை நூல் வெளியீடும் யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும்பட திரையிடலும் மன்னார் நகர மண்டபத்தில் நாளை (14) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலையருவி இயக்குனர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் உட்பட பலர் கலந்து கொள்வதுடன் நூல் நயவுரையை தமிழாசிரியர் திருமதி ஜே.சி. டிலானி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

12227144_10153883071407668_1440839712486489588_n_Fotor