நான்காவது தடவையாகவும் விருது பெற்ற ஆசிரியர்!

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பன்டாரநாயக்க சர்வதேச நாபகார்த்த  மண்டபத்தில் அதிமேதகு  ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனஅவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு விழாவில்  மாத்தளை சாஹிரா பாடசாலை ஆசிரியர் ஜனாப் ஏ.எம்.அன்சாரீன் அவர்கள் ”குரு பிரதீபா பிரபா” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

ansareen sir

 
மேற்படி விருதினை தொடர்ந்து நான்காம் முறையாகவும் பெற்றுக்கொண்ட இவ்வாசான், உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை மற்றும் மாத்தளை சாஹிரா தேசியபாடசாலை ஆகியவற்றின் பழய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.