முதலமைச்சரினால் 48 பயனாளிகளுக்கு வீடமைப்புக்கான நிதி வழங்கிவைப்பு!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு 
கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் நிதியில் இருந்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபையின் 2015-  PSDG நிதியில் இருந்து கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மூலம் 48 பயனாளிகளுக்கு 100,000 ரூபாய்கள் வீதம் வழங்க திட்டமிட்டு முதற்கட்டமாக 40,000 ரூபாய்கள் வீதம் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் வழங்கிவைக்கப்பட்டன.
DSC_9555_Fotor
அடுத்த கட்டமாக,40,000 ரூபாய்களும் அதன் பின்னர் 20,000 ரூபாய்களும் மீண்டும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, மாகாணசபை உறுப்பினர் துரை ரட்ணம் ஆகியோரும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
DSC_9603_Fotor DSC_9558_Fotor