அமைச்சர் திலக் மாரப்­ப­னவை பதவி நீக்கவும் – பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கடிதம் !

Thilak_Marapana

 சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் திலக் மாரப்­ப­னவை பதவி நீக்கம் செய்­யு­மாறு கோரி பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு 6 பேர் அடங்­கிய குழு­வொன்று கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்­ளது.

இந்த கடி­தத்தில் வழக்­க­றிஞர்கள்.நெவில் ஆனந்த, சுஜீவ தஹ­நா­யக்க,.கிஹான் பெரேரா, சமூக சேவை­யாளர் முதித கர­ணா­முதி, ஊட­க­வி­ய­லாளர். குசல் பெரேரா,தொழிற்­சங்கத் தலைவர் என்டன் மார்க்ஸ் ஆகியோர்

கையொப்­ப­மிட்­டுள்­ளனர்.

இந்த கடிதத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

மிதக்கும் ஆயுத கப்­பலும் சட்­ட­வி­ரோ­த­மான ஆயுத விற்­பனை நிறு­வ­ன­மு­மான எவன் கார்ட் நிறு­வ­னத்தின் தவை­ரான நிஷ்­சங்க சேனா­ப­தி­யி­னு­டைய சட்ட ஆலோ­ச­க­ரா­வி­ருந்த திலக் மாரப்­பன தற்­போது சிறைச்­சா­லைகள் அமைச்­ச­ராக தெரிவு செய்­ய­பட்டுள்­ள­மைக்கு எமது கடு­மை­யான எதிர்ப்பை வெளியி­டு­கின்றோம்.

60 மாதங்­களில் புதிய நாடொன்றை உரு­வாக்கும் ஐந்து அம்ச திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஏகா­தி­பத்­தி­ய­மான குடும்ப ஆட்­சியில் போன்று இல்­லாது ஜன­நா­யக ஆட்­சியை கட்­டி­யெ­ழுப்­பு­வீர்கள் என்ற நம்­பிக்­கை­யி­லேயே மக்கள் உங்­க­ளுக்கு வாக்­க­ளித்­தனர்.அதற்கு மாறாக செயற்­ப­டு­வதை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

எவன் கார்ட் நிறு­வ­னத்தின் தலைவர் கடந்த காலங்­களில் ராஜ­பக்ஷ குடும்­பத்­துடன் கிட்­டிய உறவை பேணி­யவர் என்­பது தற்­போது வெளிப்­ப­டை­யா­கி­யுள்­ளது.அதே­வேளை வழக்­க­றிஞர் வசந்த நவ­ரத்ன பண்­டா­ரவின் குறித்த நிறு­வனம் தொடர்­பி­லான அறிக்­கையில் நிஷங்க, கோத்தபாய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட அறுவர் மீது வழக்கு தொடுப்­ப­தற்­கான கார­ணிகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை நிறுவி அத­னூ­டாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்­டிய கட்­டாய நிலைக்கு ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன ஆளா­கினார்.இந்­நி­லையில் இது தொடர்பில் முழு­மை­யாக அறிந்­தி­டாத திலக் மாரப்­ப­னவை நல்­லாட்சி அர­சாங்கம் ஏன் பத­வியில் அமர்த்­தி­யது என்­பது எமக்கு கேள்­விக்­குறி­யா­கவே உள்­ளது.

இந்­நி­லையில் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் அமைச்சர் திலக்­மா­ரப்­பன தமது தோழ­ரான எவன்கார்ட் நிறு­வன தலைவர் நிஷங்­கவை பாது­காக்கும் வகையில் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை­யினை தொடர்ந்து நல்­லாட்சி அர­சாங்கம் எவன்கார்ட் நிறு­வனம் தொடர்­பி­லான தக­வல்­களை மறைக்கத் தொடங்­கி­யுள்­ளது. அதனால் தேர்தல் காலத்தில் மக்கள் விடுத்த கோரிக்­கை­க­ளுக்கு முரனாகவே நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது என்பது உறுதியாகியுள்ளது.

எனவே மீண்டும் ஒருமுறை மஹிந்த ராஜபக்ஷவின் ஏகாதிபத்திய ஆட்சி நாட்டில் உருவாவதை தடுப்பதற்காக அமைச்சர் திலக் மாரப்பனவை பதவி நீக்க வேண்டியது அவசியம்.