”ஹோல் ஸ்டார்” தொடரில் சங்கா, மஹேல, முரளி பங்கேற்பு : முதல் போட்டி நாளை ஆரம்பம் !

ஹோல் ஸ்டார் கிரிக்கெட் தொடருக்கான அணிகளில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில் பிரபல்யம் படுத்தும் நோக்கில் கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திர வீரர்களை கொண்டு அமெரிக்காவில் இருபது 20 போட்டித் தொடர் ஒன்று இடம்பெற உள்ளது.

இரு அணிகளின் தலைவர்களான சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்னும் தமது விபரத்தை அறிவித்துள்ளனர். 

 இதில் சச்சின் தலைமையிலான ‘சச்சின் பிளாஸ்டர்ஸ்’ அணியில் 2 இலங்கை உட்பட 15 பேர் இடம் பெற்றுள்ளனர். 
வோர்னர் தலைமையிலான அணியில் குமார் சங்கக்கார உட்பட 14 பேர் இடம் பெறுகிறார்கள். 

 நியுN+யார்க் உட்பட 3 அமெரிக்க நகரங்களில் இந்த இரு அணிகளும் 3 இருபது-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளன.
 முதல் போட்டி நாளை 7ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறும்.

நேற்று நியூயோர்க்கில் கூடி இரு அணிகளின் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். குலுக்கல் முறையில் அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சச்சின் அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  

மேலும்   இந்தியாவின் நான்கு நட்சத்திர  வீரர்களான சச்சின், ஷேவாக், கங்குலி, லட்சுமண் ஆகியோரும் சச்சின் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

 
சச்சின் பிளாஸ்டர்
 சச்சின் (அணித் தலைவர்), ஷேவாக், வி.வி.எஸ். லட்சுமண், பிரையன் லாரா, கங்குலி, மஹேல ஜயவர்தன, கார்ல் கூப்பர், மொயின் கான், முத்தையா முரளிதரன், கிரீம் ஸ்வான், கர்ட்லி அம்புரோஸ், ஷோன் பொலாக், கிளேன் மெக்ராத், லான்ஸ் குரூஸ்னர், சொயிப் அக்தர்

 
வோர்னர் வொரியர்ஸ் 
ஷேன் வோர்னர் (அணித் தலைவர்), மெத்யூ ஹெய்டன், மைக்கல் வோகன், ரிக்கி பொன்டிங், ஜொன்டி ரோட்ஸ், ஜக் கலிஸ், ஹெண்ட்ரூ சைமன்ட்ஸ், குமார் சங்கக்கார, சக்லைன் முஷ்டாக், டேணியல் வெட்டோரி, கர்ட்னி வால்ஷ், வசிம் அக்ரம், ஹெலன் டொனால்ட், அஜீத் அகர்கர்.