லக்சலவின் புதிய தலைவராக முன்னாள் உபவேந்தர் !

அஸ்ரப் ஏ சமத்
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்தபின்  உல்லாசபயணத்துறையினா்ருக்கு ஒர் பாரிய    உல்லாச மையாக இலங்கை  விளங்குகின்றது. இலங்கைக்கு வரும் ஒவ்வொரு உல்லாசப் பிரயாணிகள் நமது நாட்டு கிரமிய பாரம்பரிய கைப்பணி உற்பத்திகளை லக்சலவின் கொள்முதல் செய்து  உலகுக்கு எடுத்துச் சொல்கின்றனா்.  இந் நிறுவனம் கொழும்பில் தும்முல்ல, பராளுமன்றத்திற்கு அருகில் அபேகம,  போட், கட்டுபத்தை,  ரேஸ் கோஸ், மீயுசியம், கண்டி, காலி, நுவரெலியா, கட்டுநாயக்க விமான நிலையம், வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களில் இந் நிறுவனம்  இயங்குகின்றன.  
ismail vc
 இதனால் இலங்கையில் கிராமங்களில் வாழும் 1000 குடும்பங்கள் தமது உற்பத்திகளை லக்சலவுக்கு வழங்கி அவா் நேரடியாக ஆதாயம் பெறுகின்றனா். இந் நிறுவனம் இவ் ஆண்டு 24 மில்லியன் ருபா வருமாணத்தைப் பெற்று ஒரு இலாபமீட்டும் நிறுவனமாக விளங்குகின்றது. இங்கு 194 ஊழியாகள் சேவையாற்றுகின்றனா்.
 
லக்சல நிறுவனத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 10 வருடம் உபவேந்தராக கடமையாற்றிய காலநிதி இஸ்மாயில் அவா்களை புதிய தலைவராக நியமித்துள்ளேன். அவா் கடந்த பொதுத்தோ்தலில் எனது கட்சியில்  போட்டியிட்டு அரசியலில் ஈடுபட்டாா். 

SAMSUNG CSC

 அவரது நிறுவாகத்தின் கீழ் இந் நிறுவனம் மேலும் முன்னேற வேண்டும்.அதற்காக சகல ஊழியா்களும் ஒத்துழைப்பு வழங்கள் வேண்டும்.  எதிா்காலத்தில் சீனா இலங்கையில் நிறுவும் சங்கை உல்லாச கோட்டல்கள்  உருவாகும்போது லக்சல நிறுவனமும் மேலும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.  இதன் முலம்  எமது நாட்டுக்கு  அன்நிய நாட்டுச் செலாவானியை லக்சல ஈட்டி கிராமிய மட்டத்தில் தமது உற்பத்திகளுக்கு புத்துயிா் அளித்தல் வேண்டும் 
அத்துடன் மருதமுனை மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் கைப்பணி உற்பத்திகள், கைத்தரி சாரண்கள், பிடவைகள், வெற்றிக் துணிகள் கொள்முதல் செய்யப்படல் வேண்டும். இவற்றுக்காக  நேற்று அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராய்ந்தேன். அதற்காக ஆர்.டி.பி வங்கி ஊடாக கடனைப் பெறுவதற்காக இலங்கை மத்திய வங்கித் தலைவரும் பேசியுள்ளதாகவும் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அங்கு உரையாற்றினாா்.
கைத்தொழில் வா்த்தக அமைச்சா்  றிசாத் பதியுத்தீன் அமைசினால் தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமான லக்சல வின் புதிய தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகததில் உபவேந்தராக கடமையாற்றிய காலாநிதி எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டாா். இவா் இன்று கொழும்பு -7 தும்முல்லையில் உள்ள லக்சல தலைமையகத்தில் வைத்து தமது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் , பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ் அமீா் அலி, மாகாண சபை உறுப்பிணா் ரீ.ஏ அமீா்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினா் ஜெமீல், எஸ்.எஸ்.பி மஜீத் மற்றும் கட்சி ஆதரவாலாளா்களும் கலந்து கொண்டனா் 
 
 
0 0 votes
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohammed
Mohammed
8 years ago

ACMC அதிகார பங்கீகாரம் வரவேற்கதக்க விடயமாகும். இருந்தபோதிலும் அக்கரைபற்று புறக்கணிக்கபடுவது vethanaikkuriya விடயம். நீச்சயமாக ACMC இன் எதிர்காலம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை

கடந்த காலங்களில் அக்கரைபற்று அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்ட போதுதான் அங்கு தனித்துவமான தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது .

அக்கரைபற்று மக்கள் இத்தலைமையை நிராகரிக்கின்ற போதில் ஏனைய முஸ்லிம் தலைமைகள் அக்கரைபற்று மக்களை கண்ணிய படுத்த தவறும் பட்சத்தில், சரித்திரம் மீட்கப்பட வேண்டும் என்பது மனித நேயம் கொண்ட யாவரும் ஏற்க கூடிய நியாயம் ஆகும்.

தலைமைகளே சிந்தியுங்கள் !!

SLMC இன் ஆரம்ப தளமும் அக்கரைபற்றுதான் அதாஉல்லாவின் காங்கிரஸ் இன் ஆரம்ப தளமும் அக்கரைபற்றுதான்,

மயிலுக்கு ஆரம்ப தளமாக அமைய போஹின்ற வேளையில் அதனை “வெண்ணை திரண்டு வரும் பொது தாழி உடைய்ந்த ” கதையாக்கும் வேளையோ இது…?

மயிலின் அதிகாரபரவலாக்கலா!
அஹங்கார பரவலாக்கலா!
அக்கரைபற்று புறக்கணிக்கப்பட்டது ஏன்..?