மஹிந்த ஆத­ரவு அணி­யினை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்க முடி­யாது!

பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வரும் நிலையில் மஹிந்த ஆத­ரவு அணி­யினை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்க முடி­யாது.

மஹிந்த அணி­யி­ன­ருக்கு எதிர்த்­த­ரப்பில் அமர மட்­டுமே அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார். இந்த ஆட்­சியில் நாட்டை முழு­மை­யான அபி­வி­ருத்­தியின் பாதையில் கொண்­டு­செல்ல முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு­சிலர் தாம் இந்த கூட்டு அர­சாங்­கத்­துடன் கைகோர்க்கத் தயா­ராக இல்லை என்­பதை நேர­டி­யாக வெளிப்­ப­டுத்தி தாம் அர­சாங்க எதிர்ப்புக் குழு­வினர் என தெரி­வித்­துள்­ளனர்.

எமது கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அவர்­க­ளது விருப்­பத்தை தடுக்­காது அவர்கள் எதி­ர­ணியில் இருக்க அனு­ம­தி­யையும் வழங்­கி­யுள்ளார். எனினும் இவர்கள் தம்மை பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தெரி­விக்­கின்­றனர்.

பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எதிர்க்­கட்சி உள்­ளது. இன்று நாட்டின் பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் புதி­தாக உரு­வா­ன­வர்கள் எவ­ரையும் எதிர்க்­கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்க முடி­யாது. அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட விரும்­பாத கார­ணத்­தினால் இந்த அணி­யி­னரை எதிர்க்­கட்சி தரப்பில் அமர்­வ­தற்கு ஆசன ஒதுக்­கீடு செய்­து­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

மேலும் நாட்டை அபி­வி­ருத்­தியின் பாதையில் முன்­னெ­டுத்து செல்லும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். குறிப்­பாக யுத்தம் முடி­வுக்கு வந்­தபின் மிக வேக­மாக நாட்டை அபி­வி­ருத்­தியின் பக்கம் மாற்­றி­யுளோம். கடந்த ஐந்து ஆண்­டு­களில் ஆசி­யாவில் விரைவில் அபி­வி­ருத்தி கண்ட நாடு­களில் நாம் முன்­னி­லையில் உள்ளோம். அதேபோல் நாட்டில் 98 வீத­மான மின்­பா­வனை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. தற்­போது உள்ள நிலையில் நாட்டில் 2 வீத­மான மக்­களே மின்­பா­வனை இன்றி வாழ்­கின்­றனர்.

அந்த குறை­பாட்­டையும் விரைவில் நிவர்த்­தி­செய்து நாட்டில் அனைத்து மக்­களும் முழு­மை­யான மின்­சா­ரத்தை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய கட்­ட­மைப்பை உருவாக்க முயற்சித்து வருகின்றோம். அடுத்த மூன்று மாதகாலத்தில் நாடுபூராகவும் மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதற்கான சர்வதேச உதவிகளையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.