மத்திய அரசு எம்மை புறக்கணிக்கிறது – முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன்

 

உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. எனினும் குறித்த விசா­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களைக் கொண்ட குழுவே இடம்­பெ­ற­வேண்­டு­ம் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்­கொண்ட இலங்­கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­னு­மா­விடம் வலியுறுத்தியதாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கம் எம்மை முன்கூட்டியே அறிவுறுத்துவது பயன்தருவதாக அமையும் எனவும் முத­ல­மைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால் வட மாகா­ணத்தில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்கள் தொடர்­பான முழு­மை­யான தர­வுகள் எங்­க­ளுக்கு தரப்­ப­டு­வ­தில்லை. நேர­டி­யா­கவே மத்­திய அரசு பல திட்­டங்­களை செய்­கின்­றது எனவும் முதலமைச்சர் கூறினார்.

இலங்­கைக்­கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­னுமா வட­மா­காண முத­ல­மைச்­சரை அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

இச்­சந்­திப்பின் பின்னர் வட­மா­காண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில்,

வட மாகா­ணத்தில் வெளி­நாட்டு நிறு­வ­னங்கள்இ சர்­வ­தேச நாடுகள் உத­விகள்இ செயற்­திட்­டங்­களை மேற்­கொள்­ளும்­போது வடக்கு மாகாண அர­சிற்கும் வடக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கும் தர­வு­களை வழக்­கு­வது சிறந்த விடயமாகும். ஏனெனில் அத்­திட்­டங்­களில் மக்­க­ளுக்கு எவை நன்மை பயக்கும் மற்றும் நீண்ட கால பலன் கிடைக்கும் என்­பதை நாம் அறி­ய­மு­டியும்.

ஆனால் வட மாகா­ணத்தில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்கள் தொடர்­பான முழு­மை­யான தர­வுகள் எங்­க­ளுக்கு தரப்­ப­டு­வ­தில்லை. நேர­டி­யா­கவே மத்­திய அரசு பல திட்­டங்­களை செய்­கின்­றது. செய்­த­பின்னர் இதனைத் திறக்­கிறோம்இ அதனைத் திறக்­கிறோம் எனக் கூறி எம்­மையும் அழைக்­கி­றார்கள். நாங்­களும் சென்று அவற்றைத் திறக்­கின்றோம்.

வடக்­கிற்கு திட்டம் ஒன்றை மேற்­கொள்­ளும்­போது எமக்கும் அது தொடர்பில் தெரி­யப்­ப­டுத்­து­வ­தினால் அதன் பலன்­களை முழு­மை­யாக மக்­க­ளுக்கு தெரி­விக்க முடியும் என ஜப்பான் நாட்டு பிர­தி­நி­தி­யிடம் தெரி­வித்தேன்.

மேலும் நல்­லி­ணக்கம் என்­பதை எம்­முடன் கலந்து பேசாது வெளி­யி­லி­ருந்து கொண்­டு­வந்து திணிக்­க­மு­டி­யாது. எமக்குத் தேவை­யான விட­யங்­களில் நல்­லி­ணக்­கத்தைக் காட்­ட­வேண்டும்.
குறிப்­பாக அர­சியல் கைதிகள் விடு­தலை தொடர்பில் இந்த அர­சாங்கம் எவ்­வ­ளவு தூரம் இழு­ப­றிப்­ப­டு­கி­றது என்­பதைக் குறிப்­பி­டலாம். இதற்கு முன்னர் 10 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­ட­வர்­களை அர­சாங்கம் விடு­வித்­த­போது எவ்­வித அசம்­பா­வி­தங்­களும் நாட்டில் நடை­பெ­ற­வில்லை.

கடந்த காலத்தில் சிறை­களில் ஜே.வி.பி. கட்சி உறுப்­பி­னர்கள் இருந்­த­போது அவர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். தற்­போது தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்கு அர­சாங்கம் பல தடங்­கல்­க­ளையும் தாம­தத்­தையும் காட்­டு­வது வியப்­பாக உள்­ளது. இத்­த­கைய விட­யங்­களில் நல்­லெண்­ணத்தை காட்­டினால் தான் நல்­லி­ணக்கம் ஏற்­பட வாய்ப்பு உள்­ளது. இதனை விடுத்து நல்­லி­ணக்கம் என்று கூறு­வதால் நல்­லி­ணக்கம் உரு­வா­காது.

மேலும் ஐ.நா.வினால் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள உள்­ளக விசா­ர­ணையில் மக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்று நான் கருதவில்லை. காரணம் எவ்­வாறு இந்த சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பதில் எனக்கு சந்­தேகம் உள்­ளது.

கடந்த காலங்­களில் எத்­த­னையோ கல­வ­ரங்கள் ஏற்­பட்­ட­போதும் பலர் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. ஒரு­சிலர் தண்­டிக்­கப்­பட்­டாலும் மேல் நீதி­மன்றால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்கள்.
இத்­த­கைய நிலையில் உள்­ளக விசா­ர­ணையில் யாரை நீதி­ப­தி­யாக வைக்­கப்­போ­கின்றோம் என்­பது மிக முக்­கி­ய­மா­னது. வெளி­நாட்டில் இருந்தே நீதி­ப­திகள் வர­வ­ழைக்­கப்­ப­ட­வேண்டும். பக்கச் சார்­பில்­லாத நீதி­ப­தி­களை வெளியில் இருந்து கொண்­டு­வ­ரு­வதன் மூலமே நீதியைப் பெற்­றுக்­கொள்­ளலாம். அவ்­வாறு நீதியை பெற்றுக் கொள்­ளா­த­வி­டத்து மக்கள் மத்­தியில் சுமு­க­மான சூழல் ஏற்­ப­டா­த­துடன் அவர்­களின் மன­தி­லுள்ள ஏக்கம் அழி­வ­டை­யாது என ஜப்பான் பிர­தி­நி­தி­யிடம் தெரி­வித்தேன்.

இதன்­போது வடக்கு அரசும் மத்­திய அரசும் பேசிக் கொள்­வதன் மூலமே பிரச்­சி­னையைத் தீர்த்துக் கொள்­ள­மு­டியும் என்றும் உள்­ளக விசா­ர­ணைக்கு தமிழ் நீதி­ப­திகள் இல்­லையா என என்­னிடம் ஜப்பான் நாட்­டுப்­பி­ர­தி­நிதி கேட்டார்.

இதற்குப் பதி­ல­ளித்த நான்இ தற்­போது பிர­தம நீதி­ய­ர­ச­ராக உள்­ள­வரும் எனது மாண­வர்தான். உச்ச நீதி­ப­தி­யா­கவும் ஒருவர் உள்ளார். இருந்தும் குறைந்த அளவில் தமிழ் நீதி­ப­திகள் இலங்கை நீதி­மன்றில் இருக்­கின்­றார்கள். குறைந்த அளவில் இருந்­தாலும் அவர்கள் எல்­லோரும் சரி­யான தீர்­மா­னத்­திற்கு வரு­வார்­களா என்­பது தெரி­யாது.
காரணம் அவர்­க­ளையும் பயம் பீடிக்­கி­றது. பின் விளை­வுகள் ஏற்­படும் என்­பது சிறு­பான்மை நீதி­ப­தி­களின் கருத்­தாக உள்­ளது. இதை நான் கண்­கூ­டாகக் கண்­டுள்ளேன் என்­பதை ஜப்பான் பிரதிநிதியிடம் தெரிவித்தார்.

மேலும் ஜப்பான் நாட்டுப்பிரதிநிதி வடமாகாணத்தில் ஜெய்க்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் வடபகுதி நிலவரங்கள் தொடர்பாகவும் அறிந்து கொண்டார். மேலும் கிளிநொச்சியிலுள்ள விவசாய பீடத்திற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான உதவிகள் வழங்குவதில் தாம் நடவடிக்கை எடுப்பதுடன் கடற்தொழில் ஆராய்ச்சிக்கும் மற்றும் கிளிநொச்சியில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கான ஒழுங்கமைப்பை மேற்கொள்ள பரிசீலனை செய்வதாக குறிப்பிட்டார்.