மகளைப் பார்க்கச் சென்ற தாய் கைது !

crime-arrest

  சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கைப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
 மன்னார் பகுதியை சேர்ந்த மேரி மார்கிரேட் (வயது 55), படகில் புறப்பட்டு இரவு 08.45க்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தார். 
அங்கு அவரை அழைத்து வந்த படகு இறக்கிவிட்டு சென்று விட்டது. 

அதன் பின்னர் மேரி மார்கிரேட் அங்கு வழிதெரியாமல் நின்றிருந்தார். இதுகுறித்து கடலோர பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலோர பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் பொலிசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர், மகள் சுபாசினி சென்னை அம்பத்தூரில் வெளிப்பதிவில் தங்கி உள்ளதாகவும், அவரை காண இலங்கையில் இருந்து ரூ.40 ஆயிரம் கொடுத்து படகில் தனுஷ்கோடி வந்ததாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து கள்ளத்தனமாக பாஸ்போர்ட் இல்லாமல் இலங்கையில் இருந்து வந்ததாக மேரி மார்கிரேட் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.