நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட போவ­தில்லை – ஜோ பைடன்

 

அமெ­ரிக்­காவில் நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட போவ­தில்லை என துணை ஜனா­தி­பதி ஜோ பைடன் அறி­வித்­துள்ளார். ஜன­நா­யக கட்சி சார்பில் போட்­டி­யிட விருப்பம் தெரி­வித்­துள்­ள­வர்­களில், பெர்னி ஸாண்­டர்ஸூம், ஹிலாரி கிளின்டன் ஆகியோர் முன்­னி­லையில் உள்­ளனர்.

US-wants-to-be-India’s-best-friend_mini

ஹிலாரி கிளின்டன், பல மாதங்­க­ளுக்கு முன்பே ஆத­ரவு திரட்டத் தொடங்­கி­விட்டார். ஜன­நா­யக கட்சி சார்பில் போட்­டி­யிட ஆர்வம் தெரி­வித்­துள்ள பெர்னி ஸாண்டர்ஸ் என்­ப­வரும் கிட்­டத்­தட்ட அது­போன்ற தொகையைத் திரட்­டி­யுள்ளார் என்று கூறப்­ப­டு­கி­றது. பல்­வேறு மாகா­ணங்­களில் சூறா­வளிப் பயணம் மேற்­கொண்டு, கட்­சி­யி­ன­ரையும் பொது­மக்­க­ளையும் சந்­தித்து ஆத­ரவு திரட்டி வரு­கின்­றனர்.

 

இத­னி­டையே, துணை ஜனா­தி­பதி ஜோ பைடன் ஜனா­தி­பதி தேர்தல் களத்தில் குதிப்பார் என்று கடந்த சில மாதங்­க­ளா­கவே ஊகச் செய்­திகள் வலம் வந்த வண்­ண­மி­ருந்­தன. ஆனால் இந்த வதந்­திக்கு ஜோ பிடன் முற்­று­புள்ளி வைத்­துள்ளார். ஜோ பைடன் அறி­விப்பால் ஹிலாரி கிளின்­ட­னுக்­கான வெற்றி வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.