விமல் வீரவன்ச கைது !

 

கடவுச்சீட்டில் நிலவிய குளறுபடி காரணமாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தடுப்பிலிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

Unknown

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வதற்கு முற்பட்டபோது கடவுச்சீட்டில் குளறுபடி காணப்படுவதாக குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

 

விமல் வீரவன்சவை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.