ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றுள்ளது இஸ்ரேல் !

பலஸ்தீனின் அப்பாவி பொதுமக்கள் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. 
இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றுள்ளது இஸ்ரேல் இராணுவம். 
166401009Israel-soldiers
15 வயது மற்றும் 17 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களுமே கொல்லப்பட்டுள்ளனர். 

பலஸ்தீனின் மேற்குகரையின் எபிரோன் நகரப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இவர்கள் தவிர 24 வயது மற்றும் 27 வயதுடைய இருவர் உட்பட மேலும் ஒருவர் நேற்றைய தினம் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தினிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மட்டும் மொத்தமாக 50 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் இராணும் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் 100க்கும் மேற்பட்ட பலஸ்தினியர்கள மற்றும் சமூக ஆர்வலர்களையும் இஸ்ரேல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.