தமிழினியின் இறுதிக் கிரியைகள் !

காலஞ்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமியின் இறுதி கிரியைகள் இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

1775610904LTTE
தமிழினியின் இறுதி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி கடந்த 18ம் திகதி மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை மரணமடைந்ததார்.