ஆளுந்தரப்புடன் இணைந்து கொண்ட ஐ. தே. க யின் இரண்டு உறுப்பினர்கள் !

அபு அலா , ஊடகப் பிரிவு 
கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.

சபை அமர்வின்போது எதிர்தரப்பு பக்கம் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் டீ.டீ.மெத்தானந்த சில்வா, பி.எல்.அருன் ஸ்ரீசேன ஆகியோர் ஆளும்தரப்பு பக்கம் மாறினர்.

DSC_5498_Fotor

சபையின் இன்றைய நிகழ்வாக விசாரணையின்றி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப் பட்டுள்ளோரை விடுதலை செய்யவேண்டும் என்ற பிரேரணை மற்றும் பல தனிநபர் பிரேரணை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.