சஜின் வாஸ் சிங்கப்பூர் செல்கின்றார் !

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்த்தனவுக்கு 5 நாட்கள் வௌிநாடு செல்ல கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மருத்துவ தேவைக்காகவே அவர் சிங்கப்பூர் செல்ல பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய அனுமதியளித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Sajin_Vass_Gunewardane_0
சஜீன் வாஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த உத்தரவுக்கு இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

எனினும் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்த நீதிமன்றம் சந்தேகநபர் வௌிநாடு செல்ல அனுமதியளித்துள்ளதோடு, அவரது கடவுச்சீட்டை அடுத்த மாதம் 3ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.