அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாதென்பது இனவாத சிந்தனையாகும் !

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என கூறுவது இனவாத சிந்தனையாகவும் இனவாத கருத்தாகவுமே நோக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

suresh-premachandran-MP1

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தங்களை விடுவிக்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். 

பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள். 

ஐ.நா மனித உரிமை ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. 

இப்போதும் தம்மை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என சிறையில் உள்ள அரசியல் கைதிகள் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி வருகின்றார்கள். 

ஆனால் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இது தன