அட்டாளைச்சேனையில் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

எஸ்.எம்.அறூஸ்
கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று (2015-10-16) வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் நிந்தவுர் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச சபைகள் இணைந்து இந்த சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தன. 
DSC03203_Fotor
மழைக்காலத்தை கருத்தில் கொண்டு வடிகான்கள், , வீதியோரங்கனில்  சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் றகுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.சலீம், அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத்,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அட்டாளைச்சேனை,பாலமுனை,ஒலுவில்,தீகவாபி ஆகிய கிராமங்களில் மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 
 
 DSC03237_Fotor DSC03248_Fotor