ஐமசுகூ தேசியப் பட்டியல் தெரிவுக்கு எதிராக மற்றுமொரு மனு !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் நியமனங்களை இரத்துச் செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

570607-CourtJudgeJustice-1372617557-583-640x480
நாகானந்த கொடிதுவக்கு என்பவர் சட்டத்தரணி மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யும் தீர்மானம் சட்ட விரோதமானது என, தீர்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர் கோரிக்கைவிடுத்துள்ளார்.