கல்வித்துறையை முன்னிலைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி பெரும் முயற்ச்சி எடுத்து வருகின்றார் !

பி.எம்.எம்.ஏ.காதர்
எமது நாட்டின் கல்வித்துறையை முன்னிலைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெரும் முயற்ச்சி செய்துவருகின்றார் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள தொழில் நுற்பவியல் ஆய்வுகூடமும்,அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில் 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப் பட்டுள்ள வகுப்பறைக் கட்டமும் திறந்து வைத்த நிகழ்வு புதன்கிழமை(14-10-2015)இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு கட்டங்களைத் திறந்து வைத்து இங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இங்கு மேலும் உரையாற்றிய அவர்; எமது நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் கல்விக்கென்று விஷேட திட்டங்கள் ஆரம்பிக்;;கப்பட்டுள்ளது.

 HAREES
திறமையுள்ள மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களை வழங்குவதற்கான செயற்திட்டங்களை உருவாக்கவதற்கான பணியில் ஜனாதிபதி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.எந்த விதமான இன மத குல பேதங்களுக்கு அப்பால் எல்லோரும் இலங்கையர் என்ற அடிப்படையில் இலங்கையில் பிறந்த மாணவர்கள் சர்வதேச தரத்திலான தகுதிகளையும், வாய்ப்புக்களையும் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்றார்.
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவர் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாக 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி இந்த தொழில் நுற்பவியல் ஆய்வு கூடத்திற்கான அடிக்கல்; பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் நடப்பட்டது.
இன்று இந்தக் கட்டம் 90 இலட்சம் ரூபா செலவில் பூரணப்படுத்தப்பட்டு 64 கணணிகளும் ஏனைய உபகரணங்களும் அடங்கலாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்த மற்றுமொரு முயற்ச்சியாக மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி வகுப்பறைக் கட்டத்திற்கான அடிக்கல் அவரினாலேயே நடப்பட்டது. இக்கட்டம் 40 இலட்சம் ரூபா செலவில் இப்போது பூரணப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,,விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,ஏ.ஆர்.எம்.அமீர்,ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர் அலி பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யாஸிர் அறபாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள்,பாடசாலை நலன்விரும்பிகள்,பெற்றோர்கள் மாணவர்கள் பொது மக்கள் என பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.