ஜெனிவா ஒப்பந்தம் நாட்டின் தேசிய சுதந்திரம், சுயாதீனத்தை அழித்துள்ளது : தினேஷ் !

அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஜெனிவா ஒப்பந்தம் நாட்டின் தேசிய சுதந்திரம், சுயாதீனத்தை அழித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Dinesh-e1372323163147_0

அரசாங்கத்தால் அந்த ஒப்பந்தம் குறித்த உண்மையான நகல் பாராளுமன்றத்திலோ அல்லது நாட்டுக்கு முன்னோ முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும் குறித்த ஒப்பந்தத்தின் ஆபத்தை நாட்டுக்கு மறைக்க இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை இந்த உண்மைகளை வௌிக் கொண்டு வர ஒன்றினைந்த எதிர்க்கட்சியினரால் ஒக்டோபர் 19ம் திகதி கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் மாநாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.